வடமாகாண விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2 ஆம் இடம்!!

518

2017 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11 ஆவது வடமாகாண விளையாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), ஜூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம் இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம் இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வீர வீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 2018 ஆம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்பநிகழ்வாக மாகாண விளையாட்டுக் கொடி மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் இ.குருபரனினால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர் மோகனதாஸிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.