கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் தொங்கிய மனிதத் தலை!!

238

கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரை செல்லும் ரயிலுக்கு கீழ் உடல் இல்லாத தலை ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேமுல்ல பிரதேசத்தில் ரயிலின் கீழ் பகுதியில் மனித தலை சிக்கியிருந்தமையை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த மனித தலை கம்பஹா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை நேற்று கொள்ளுப்பிட்டியவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சித்து போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தனர்.

இன்று மீட்கப்பட்ட தலைப்பகுதியில் அவர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய மீட்கப்பட்ட மனித தலை,12வயதுடைய சிறுவனின் தலையே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.