வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

712

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.06.2017) மதியம் 12.30 மணியளவில் கஞ்சாவுடன் நின்ற இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கிளிநொச்சி அக்கராயன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் தரங்ககுமார சேனவிரத்ன ( வயது 33) இன்று விடுமுறையைடுத்து அவரது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி பேரூந்தில் பயணித்த சமயத்தில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 16 பைகளில் பொதி செய்யப்பட்ட 25 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை நாளைய தினம் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.