இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் : பதறிய மக்கள்!!

329

தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி தரைமட்டமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தி நகரில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்தது.

இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கட்டிடத்தை முழுவதுமாக இடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

கடந்த வாரம் இடிபாடுகளில் சிக்கி ஊழியர் ஒருவர் பலியானதால் கட்டிட இடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை கட்டிடம் இடிக்கும் பணி மீண்டும் துவங்கிய நிலையில், ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சுற்றிலும் புகை மண்டலாக தற்போது காட்சியளிக்கிறது. இது குறித்து கட்டிட இடிப்பு ஒப்பந்ததாரர் பீர் முகமது கூறுகையில், கட்டிடத்தின் ஒரு பகுதி தானாக இடிந்து விழவில்லை. எங்களின் திட்ட மேற்பார்வையின் படியே இடிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மிச்சமிருக்கும் பாதி கட்டிடத்தையும் இன்று மாலைக்குள் இடித்து விடுவோம் என கூறிய முகமது, இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறியுள்ளார்.