என் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் : அமலா பால்!!

322

தன் வாழ்வில் நிச்சயமாக மீண்டும் திருமணம் நடைபெறும் என அமலா பால் கூறியுள்ளார்.

‘சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலா பால். ‘மைனா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து நடித்த படங்கள் அமலா பாலுக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தன. பல விருதுகளையும் அவர் பெற்றார்.

‘தெய்வத் திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்தார். 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இரண்டு வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016 இல் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள். கடந்த பெப்ரவரி மாதம் அமலா பால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யைப் பிரிந்தார்.

அதன் பிறகு, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுப் பயலே-2’ மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், “திருமணம் என்பது முழுவதுமாக வெறுத்து ஒதுக்கும் வி‌டயம் அல்ல. என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் நடைபெறும். என்றாலும், அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. இப்போது என் கவனம் நடிப்பின் மீது மட்டுமே இருக்கிறது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலா பால்.