வவுனியாவில் முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!!(இரண்டாம் இணைப்பு)

300

 
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சத்தியத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் கடைசியில் சத்தியமே வெல்லும் , விசாரணைக்குழுவின் தீர்ப்பை முதல்வர் உதாசீனம் செய்வதா? , என பல்வேறு வாசகங்களை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது அவ்விடத்திற்கு வருகைதந்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்ப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரின் தலையிட்டினால் சுமுகமான நிலைக்கு வந்தது.

தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்ட இடத்தினை விட்டு சென்றதுடன் முதலமைச்சரின் ஆதரவாளர்களும் போராட்ட இடத்தினை விட்டு சென்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.