இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் இரத்தாகின்றது!!

430

முன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் மீதான ஆர்வம் படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது.

இரு­ப­துக்கு – 20 கிரிக்கெட் போட்­டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடு­வ­தாலும், அதிக அளவில் சுவா­ரஸ்யம் இருப்­ப­தாலும் ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்­ணத்தை இரண்டு வரு­டங்களுக்கு ஒரு­முறை நடத்த முடிவு செய்­தது.

அதன்­படி தென்­னா­பி­ரிக்கா (2007), இங்­கி­லாந்து (2009), மேற்­கிந்­தியத் தீவுகள் (2010), இலங்கை (2012), பங்­க­ளாதேஷ் (2014), இந்­தியா (2016) ஆகிய நாடு­களில் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் நடத்­தப்­பட்­டது.

அதன்­படி அடுத்த வருடம் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்­தப்­பட வேண்டும். ஆனால்இ முன்­னணி அணிகள் தங்களு­டைய இரு நாடுகளுக்­கி­டை­யே­யான தொடரில் அதிக அளவில் விளை­யாட வேண்­டி­யி­ருப்­பதால் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொட­ருக்­கான அட்­ட­வ­ணையை தயார் செய்­வதில் சிரமம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதனால் அடுத்த வருடம் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை நடத்­து­வ­தில்லை என்று ஐ.சி.சி. முடிவு செய்­துள்­ளது. 2018 ஆம் ஆண்­டிற்கு பதி­லாக 2020ஆம் ஆண்டில் தொடரை நடத்த ஐ.சி.சி. முன்­வந்­துள்­ளது.