வவுனியாவில் சாந்தி சிறீஸ்கந்தராசாவுடன் கதைக்க முடியாது என தடுத்த கணவன் : மக்கள் வாக்குவாதம்!!

538


 
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (19.06.2017) காலை 10.30 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது அவ்விடத்திற்கு சமுகமளித்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்ப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.



அதன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைப்பதற்கு சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களின் இடத்திற்கு சென்றார்.

இதன் போது அவ்விடத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது எனவும் அவர் எனது மனைவி நான் கதைக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரின் கணவர் தெரிவித்தார்.



அத்துடன் முதலமைச்சரின் ஆதரவாளர் பொலிஸாரினால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டனர்.



இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,


நான் மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் வயதுக்கு மூத்தவர்கள், தந்தைக்கு சமனானவர்களை கை நீட்டி அடிப்பதற்கு முற்படுபவர்களுடன் நான் கதைக்க தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.