வவுனியா புளியங்குளத்தில் இந்திய துணைத்தூதுவரால் திருவள்ளுவர் சிலை திறப்பு!!

350

 
வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பாடசாலை அதிபர் ச.பரமேஸ்வரநாதன் தலைமையில் இன்று (19.06.2017) காலை 9.30 மணிக்கு இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜனால் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய நடனங்களுடன் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன், தமிழ்நாட்டின் தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் , வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி கு.சிதம்பரநாதன், சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடனம் பாடசாலை மாணவர்களின் திருக்குறல்-பாவோதல், பேச்சு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இத் திருவள்ளுவர் சிலை தமிழ்நாட்டின் தொழிலதிபர் டாக்டர். வி.ஜி. சந்தோசம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.