வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவியிற்கு ஏற்பட்ட கொடூரம் : வைத்தியசாலை வளாகம் போர்க்களமானது!!

616


சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உத்திரப்பிரதேசம் கான்பூரில் உள்ள ஜகிரிதி வைத்தியசாலையில் அகன்ஷா என்ற 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவியிற்கு வைத்தியசாலையில் உள்ள ஐசியூ வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள உதவியாளர் ஒருவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த அகன்ஷாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி, வைத்தியசாலை வளாகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர்.



அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கல்லை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொலிஸார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து மாணவி கூறுகையில், அன்றைய தினம் தன்னுடைய தாய் தனக்கு உடைகளை மாற்றிவிட்டு சென்று விட்டார்.அதன் பின் இரவு நேரத்தில் தன்னுடைய வார்டிற்கு வந்த உதவியாளர் தன்னுடைய உடை முழுவதும் ஈரமாக இருப்பதாகவும் அதனால் உடை மாற்ற வேண்டும் என்று கூறினார்.


இதனால் , மற்றொரு பெண் தாதியரை அல்லது தன் தாய்யை கூப்பிடுவதாக நான் கூறினேன். ஆனால் அவரோ அவர்கள் யாரும் இல்லை தானே உடை மாற்றி விடுகிறேன் என்று கூறினார்.

அதன் பின் தன் உடையை அவர் மாற்றினார். அப்போது தனக்கு ஒரு வித தயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக எனது படுக்கைக்கு வந்து படுத்துவிட்டேன். படுக்கைக்கு வந்த அவர் தன் உடலில் ஏதோ ஒரு ஊசியை செலுத்தினார். அப்போது நான் மயங்கிய நிலையை அடைந்துவிட்டேன். அதை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறியுள்ளார்.


இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், காலையில் வந்து பார்க்கும் போது, என் மகளிடன் உடையில் மாற்றங்கள் இருந்தன. அப்போது அவள் எதுவும் கூறாமல் அழுது கொண்டு இருந்தால். அவளைத் தொடர்ந்து கேட்ட பின் நடந்தவற்றை கூறினாள்.

இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த தகவல் வெளியில் பரவியதால், எங்கள் உறவினர்கள் மற்றும் சிலர் எங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர் என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமி தொடர்பாகவும் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.