வஸ்ட் அப்பை பின்னுக்கு தள்ளிய பேஸ்புக்!!

382

சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருந்து வந்த பேஸ்புக்கை, வட்ஸ் அப் பின்னுக்கு தள்ளியுள்ளது.

பேஸ்புக்கை விட வட்ஸ்ப் அப்பில் தான் அதிகமாக செய்திகள் பகிரப்படுகின்றன என்று டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

5 கண்டங்களில், 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வெளியான டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

வட்ஸ் அப் செயலியின் மூலம் 15 சதவீதமும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் 8 சதவீதமும், ஸ்நாப்சாட், வைபர் மூலம் 2 சதவீதமும், வீசாட் மூலம் 1 சதவீதமும் செய்திகள் பகிரப்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அதிகபட்சம் மலேசியாவில் 51 சதவீதம் பேர் வட்ஸ் அப் மூலம் செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அமெரிக்காவில் 3 சதவீதம் மட்டுமே செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.