வவுனியாவில் ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ நூல் வெளியீடு!!

612


 
பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் எழுதிய ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ எனும் நூல், வவுனியா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (25.06) நடைபெற்றது.

நூலாசிரியரின் முதல் படைப்பான இந்நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும், விருந்தோம்பல் பண்பாடு, இந்து மதம் கூறும் நடை, உடை, பாவனை போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.



வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, திடீர் மரண விசாரணை அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர், மற்றும் தமிழ் மொழி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன், மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், கல்விமான்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.