நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் வேலை செய்தவர் மர்ம மரணம்!!

540

பிரபல திரைப்பட நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தின் திருச்சி காஜா மலை பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டில் திருச்சி சாத்தனுரைச் சேர்ந்த சக்தி என்ற ஆறுமுகம் தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.

இவர் கடந்த மூன்று நாட்களாக சிவகார்த்திகேயனின் வீட்டிற்கு வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வீட்டிற்கு அருகே உள்ள கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குட்டையில் சடலமாக கிடந்தது ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்