தலை துண்­டிக்­கப்­பட்டு இரண்டாக பிளக்கப்­பட்ட பின்­னரும் துள்ளிப் பாய்ந்த மீன்!!

338


தலை துண்­டிக்­கப்­பட்டு, உடல் இரண்டாக பிளக்கப்பட்ட மீன் ஒன்று, மீன் வியா­பா­ரியின் தட்டில் நீண்ட நேரம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்த சம்­பவம் ஜப்­பானில் இடம்பெற்றுள்ளது. இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்று இணை­யத்தில் வெளி­யாகி வேக­மாக பரவி வரு­கி­றது.



“யெலோஃபின்” ரகத்தைச் சேர்ந்த இந்த மீன் பிடிக்­கப்­பட்­ட­வுடன் அதன் தலை துண்­டிக்­கப்­பட்டு, அதன் உடல் நெடுக்­காக வெட்­டப்­பட்­டி­ருந்­தது.

எனினும், ஜப்­பா­னிய மீன் விற்­ப­னை­யா­ளரின் தட்டில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த மீன் பாகம் துள்ளிப் பாய்ந்து கொண்­டி­ருந்­தது. இதைப் பார்த்த வாடிக்­கை­யா­ளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்­தனர்.



சிலர் இக்­காட்­சியை வீடி­யோவில் பதிவு செய்­தனர். சுமார் ஒன்­றரை நிமிட நேரம் இம்மீன் பாகம் துள்ளிப் பாயும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. இலட்­சக்­க­ணக்­கானோர் இவ்­வீ­டி­யோவை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்துள்ளனர்.