6 ஆயிரம் ரூபாய்க்காக கொலை செய்யப்பட்ட நடிகை : நீடிக்கும் குழப்பம்!!

304

இந்தி நடிகை கிருத்திகா சவுத்ரி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்த நிலையில், 6 ஆயிரம் ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கிருத்திகா சவுத்ரி. சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 12ஆம் திகதி கிருத்திகா மர்மமான முறையில் அவரது மும்பை வீட்டில் இறந்து கிடந்தார்.

அழுகிய நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் போதை மருத்து கும்பலுடன் கிருத்திகாவுக்கு தொடர்பு இருந்ததும், கும்பலை சேர்ந்த இருவர் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

மேலும், இருவரும் பணம் தொடர்பாக அடிக்கடி கிருத்திகாவுடன் தகராறில் ஈடுபடுவார்கள் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளார்கள்.

இதையடுத்து போதை கும்பலை சேர்ந்த ஷகீல் நசீம் கான், பாட்ஷா மக்மலால் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்தார்கள்.

6 ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் கிருத்திகாவை அவர்கள் கொன்றதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி கூறியுள்ள கிருத்திகாவின் சகோதரர் தீபக், கிருத்திகாவின் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தோழி ஒருவருக்கு 50 ஆயிரம் கடன் கொடுத்த கிருத்திகா அதை திருப்பி கூட கேட்டதில்லை.

இப்படியிருக்கையில், 6 ஆயிரம் பிரச்சனையில் கொலை நடந்ததாக கூறுவது நம்பும்படி இல்லை. பொலிசார் எதையோ மறைக்க நினைக்கிறார்கள் என கூறியுள்ளார்.