வவுனியா கணேசபுரத்தில் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா!!

505


 
வவுனியா கணேசபுரம் கிழக்கு கிராமத்தில் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2017) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வவுனியா கனேசபுரம் கிழக்கு கிராமத்தில் அமைக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நாட்டி வைத்தார்.



இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் ப.பிரதீபன், கணேசபுரம் விநாயக வித்தியாலய அதிபர், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கிராம சேவையாளர், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

5 லட்சம் ரூபா செலவில் இவ் அறநெறிப் பாடசாலை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.