பாலம் இல்லாததால் உயிரை பணயம் வைக்கும் கிராம மக்கள்!!

785

கிராமம் ஒன்றில் பாலம் இல்லாததால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடந்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் தவி நதி அமைந்துள்ளது, இதன் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள கிர்ச்சி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லவும், பள்ளிக்கூடத்துக்கு செல்லவும் அங்குள்ள ஆற்றை கடக்க வேண்டியுள்ளது.

ஆனால், இங்கு பாலம் இல்லாததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடக்கிறார்கள்.

மழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் கிராம மக்களின் நிலை அவ்வளவு தான். தங்களின் பிரச்சனையை தீர்த்து பாலம் கட்டி தர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன் வரவேண்டும் என கிர்ச்சி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.