அடிக்கடி செல்பி எடுப்பது ஆபத்தானதா?

412


அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.



மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது நமது உயிரை பாதிக்கும் வகையிலும் சூழ்நிலைகள் அமைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

செல்பி எடுப்பதால் வரும் விளைவுகள்



சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாக செல்பி எடுத்து போடுவதினால் அதற்கு மட்டும் அடிமையாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் மன ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.



வித்தியாசமான செல்பி எடுக்க வேண்டும் என்று மிகப் பெரிய கட்டிடங்கள், அருவிகள் மற்றும் மலைகள் ஆகியவற்றின் மீது எடுக்கும் போது கவனச் சிதறல் காரணமாக மரணம் கூட நிகழலாம்.


நண்பர்களுடன் சேர்ந்து தலையை ஒன்றாக ஒட்டிக் கொண்டு செல்பி எடுக்கும் போது, ஒருவரின் தலையில் இருக்கும் பேன் அடுத்தவர்களுக்கு பரவுகிறது.

செல்பி எடுக்கும் போது, மிகவும் அருகில் மொபைல் வைத்து எடுப்பதால், குண்டாக இருப்பதாக தெரியும். இதனால் ஒரு சிலர் உடல் பருமன் அதிகரித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு உணவுகளை குறைப்பதால் உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.