வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

243

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (17.07.2017) மாலை 6.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பரந்தன் பகுதியிலிருந்து பேரூந்து மூலம் 1கிலோ 790கிராம் கேரளா கஞ்சா பொதியினை அனுராதபுரம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட கருணாகே ருவன் சாமர (வயது 22) என்பவரை இன்று (17.07.2017) மாலை 6.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மாதத்தில் ஏழுற்கு மேற்பட்ட நபர்கள் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.