வவுனியா கனகராயன்குளத்தில் சகோதரர்கள் உட்பட அறுவர் கஞ்சாவுடன் கைது!!

260

வவுனியா கனகராயன் குளத்தில் நேற்று (17.07) மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் சகோதரர்கள் உட்பட அறுவரை கைது செய்துள்ளதாக கனகராயன்குள பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாருதி மோட்டார் வாகனத்தில் சுற்றுலாவிற்கு சென்ற இளைஞர்கள் யாழ்பாணத்திலிருந்து நேற்றைய தினம் அவர்களுடைய சொந்த இடமான கண்டிக்கு சென்று கொண்டிருக்கும் போது கனகராயன்குளத்தில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிசார் சந்தேகத்தில் மறித்து சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட 2 கிலோ 200 கிராம் கஞ்சா, மாருதி மோட்டார் வாகனம் சகோதரர்கள் இருவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கனகராயன் குளம் பொலிசார் தெரிவித்தனர்.