டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரிப்பு!!

226


நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93, 323 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக உயர்வடைந்துள்ளது.



நீர்கொழும்பு மகதுனுபிட்டிய பிரதேசத்தில் 48 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17.07) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.



டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர் குணமடைந்த பின்னர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் ருஹூல் ஹக் கூறினார்.



இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் இருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அவர் இரண்டு வார காலமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் டெங்குவிற்காக சிகிச்சை பெற்றுள்ளார்.