விருந்துக்கு சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக பலி!!

208


ரயில் தண்டவாளத்தில் நடந்த சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



நேற்று இரவு வாதுவ தல்ப்பிட்டிய ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மூவர் மோதுண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறித்த ரயில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மூவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்



பொலிஸாரின் தகவல்களுக்கமைய தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக சென்ற ரயில் ஒன்றில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வதற்கு அரசாங்கம் அண்மையில் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.