வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வாழ்வாதார உதவிகள்!!

796

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை, வவுனியா தமிழ் பிரதேசசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, செட்டிகுளம் பிரதேசசபைகளுக்குள் உள்ளடங்கும் கிராமங்களில் மிகவும் அடிப்படை வசதிகுறைந்த கொட்டில்களில் குடியிருக்கும் மக்களுக்கு கூரை சீற் கூரைத்தகரம் மலசலகூடம் அமைத்தலுக்கான உதவிகளை வழங்கினார்.

இன் நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர், வவுனியா வடக்கு பிரதேசசபை செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.