வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் 70வது நினைவுதினம் அனுஷ்டிப்பு!!

616

 
வவுனியா தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள பிரதான கண்டி வீதியிலுள்ள சுவாமி விபுலானந்தரின்; நினைவுச்சிலையடியில் இன்று (19.07.2017) காலை 8.30 மணியளவில் அன்னாரின் 70அவது நினைவு தினம் வவுனியா தமிழ் மாமன்றத்தின் தலைவர் திரு. கிருபானந்தகுமாரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலை இலக்கிய நண்பர்கள்வட்டத் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன், இத்திருவுருவச்சிலையினை நிறுவிய முன்னாள் நகர பிதாவும் தற்போது வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர உபபிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். ஸ்ரீனிவாசன், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ்.சந்திரகுமார்(கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், நகர கிராமசேவையாளர், சமூக ஆர்வலர் ஆர்.சூரியகுமார், மற்றும் சமூக ஆர்வலர்கள், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.