இலங்கையில் நடந்த அதிசயம்!!

497

 
மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இந்த முட்டையை கொள்வனவு செய்துள்ளார்.

முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து பார்க்கும் போது சிறிய அளவிலான இன்னுமொரு முட்டை அந்த முட்டைக்குள் காணப்பட்டுள்ளன.

இந்த பெரிய முட்டையில் ஏனைய முட்டைகளை போன்று மஞ்சள் கரு, வெள்ளை கரு என்பன காணப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக சிறிய முழுமையான முட்டை ஒன்றும் காணப்பட்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.