கட்டார் நெருக்கடி : நான்கு நாடுகளின் திடீர் தீர்மானம்!!

700


வளைகுடாவில் நெருக்கடி நிலை தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதனை குறைத்துக் கொள்ள பிராந்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன.



இதற்கிணக்க கட்டாருக்கு எதிராக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் குறைத்துள்ளன. முதலில் 13 நிபந்தனைகளை விதித்திருந்த வளைகுடா நாடுகள், தற்போது அதை ஆறாக குறைத்துள்ளன.

தற்பொழுது எழுந்துள்ள பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண ஆறு நிபந்தனைகளையும் கட்டார் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.



பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கட்டார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் ராஜதந்திர உறவுகளை துண்டித்தன.



பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மீண்டும் உறவைத் தொடரத் தயார் என்று கூறிய அந்த நாடுகள் அதற்காக 13 நிபந்தனைகளை விதித்தன.


13 நிபந்தனைகளையும் கட்டார் ஏற்க மறுத்ததால், அவற்றை தளர்த்தி புதிய நிபந்தனைகளை வளைகுடா நாடுகள் வித்துள்ளன.