ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள்!!

305


ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.



வீடியோ பதிவுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களும் (ட்ரோன்கள்) அதனை பயன்படுத்துவோரும் தங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நாடாளுமன்றில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்படவுள்ளன.



தற்போது இந்த ஆளில்லா விமானங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



சிவில் விமான சேவை அதிகார சபையின் அனுமதி மட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான பகுதியின் கலாச்சார, தொல்பொருள், வடிகாலமைப்பு, சக்திவள அதிகார சபைகளினதும் பொலிஸ் நிலையத்தினதும் அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


ஆளில்லா விமானங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் விமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் பொழுது போக்கு அல்லது கல்வி நோக்கத்திற்காக 200 கிராமிற்கு குறைந்த எடையுடைய 150 அடி உயரம் வரையில் செல்லக்கூடிய சிறிய ரக ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


சில நபர்கள் ட்ரோன்களை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட அந்தரங்க விடயங்களை வீடியோ பதிவிட்டுக் கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.