வவுனியாவில் குடும்பஸ்தரைத் தாக்கிவிட்டு பணம் திருட்டு!!

507

வவுனியாவில் இன்று (20.07.2017)0 அதிகாலை 1 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணத்தினை திருடிச்சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா புகையிரதத்திற்கு முன்பாகவுள்ள மதுபான விருந்தினர் விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த குருமன்காட்டில் வசித்துவரும் 30 வயதுடைய குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு அவரிடத்திலிருந்த 62100 ரூபா பணத்தினைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.