4 மாத குழந்தை தாயுடன் பேசும் அதிசயம்!!

455

கர்நாடகாவில் 4 மாத குழந்தை தனது தாயிடம் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மாவட்டம் ராமபுரா பகுதியைச் சேர்ந்த நந்தீஷ்- ரம்யா தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை, தாய் ரம்யா வேண்டுமா என கேட்டால் வேண்டும் என பதில் அளிக்கிறது, அதேபோல் தாயின் குரலுக்கு பதில் தருகிறது, தாய் ஏதாவது பேசினால் அதற்கு பதில் தருகிறது.

இந்த அதிசய குழந்தையை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது, தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் 5 மாதங்கள் இருக்கும் போதே தாயின் குரலை கேட்டு பழகி விடுகிறது. இதனால் பிறந்த 10 முதல் 11 மாதங்களில் நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் இந்த குழந்தை பிறந்து நான்கு மாதங்களில் தாயிடம் பேசுவது அதிசயமாகவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.