உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் திறப்பு!!

403

 
உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் 10 வாரங்களுக்குள் கட்டப்பட்டு பயணிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்து தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மேம்பாலம் சுவிஸ்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் செர்மட் பள்ளத்தாக்கை கடப்பதற்கு 4 மணி நேரம் தேவைப்பட்டதாகவும் தற்போது மேம்பாலம் கட்டியதன் மூலம் 10 நிமிடங்களில் கடக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாலம் தரையில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் அகலம் 65 செ.மீட்டர் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 7218 அடி உயரத்தில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது.

ஆனால் இந்த சாதனையை சுவிஸ்லாந்து மேம்பாலம் முறியடித்து உலகின் மிக நீளமான இந்த நடை மேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், அதிக உயரத்தை விரும்புவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த மேம்பாலத்தில் பயணம் செய்வது அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.