வவுனியா மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு!!

1020

 
மக்கள் வங்கி வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று (05.08.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மதியம் 1.00 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் வன்னி பிராந்திய முகாமையாளர் சிவா சிவக்கொழுந்து தலைமையில்  இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி முகாமையாளர் கு.கோடிஸ்வரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள், மக்கள் வங்கி பிராந்திய மற்றும் வவுனியா கிளை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜி.ஜங்கரன் ( வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) , கே.ஆர்.கமலநாதன் (யாழ். பல்கலைக்கழகம்) இருவரினதும் விரிவுரையில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.