வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!(படங்கள், வீடியோ )

438

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது  ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான   தில்லைச்சிவன் என அழைக்கப்படும்  சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான  டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ்   வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி  லம்பிகாத்வனி  ஆகியோரால் பாடப்பட்ட இலந்தைவனப் பாடல்கள் என்னும் இசைப்பேழை நேற்றுமுன்தினம்    05.08.2017 சனிக்கிழமை காலை வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் அமரர்.கார்த்திகன் வேலாயுதனாதன் நினைவாக  வெளியிடப்பட்டது.

மேற்படி நிகழ்வு   ஆலய பூஜையை தொடர்ந்து  அதிதிகள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. செல்விகள் நிரோஷினி அபிலக்க்ஷனா லக்ஷா  ஆகியோரது வரவேற்று நடனம் இடம்பெற்று தொடர்ந்து ஆலய தர்மகர்த்தா அமரர் மதியழகனின் புதல்வி திருமதி. வேணுப்பிரியா தெய்வீகன்  வரவேற்புரை   நிகழ்த்தினார்.

கோ.பரமானந்தன் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் )தலைமையுரையை நிகழ்த்த கவிஞர் .இ.த.ஜெயசீலன் (பிரதேச செயலர் பருத்தித்துறை)அறிமுக உரையையும் பேராசிரியர்.இரா.சிவச்சந்திரன் (முன்னாள் கலைப்பீடாதிபதி யாழ்ப்பாண பல்கலைகழகம்)வெளியீட்டுரையையும் வழங்கினர் .

தொடர்ந்து இசைபேழை  வெளியீட்டின்  சிறப்பு பிரதிகள் வழங்கும் வைபவம் இடம்பெற்று பாடலாசிரியர்  வேலணையூர்  சாமி புத்தன் அவர்களை கௌரவிக்கும்  நிகழ்வும்  சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் மு.திருஞானசம்பந்தபிள்ளை அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது .நிகழ்வு பாடலாசிரியர் சாமிபுத்தனின் நன்றி பகிர்தலுடன் நிறைவு பெற்றது.