மின்சாரத்தை உணவாக உட்கொள்ளும் அதிசயம் மனிதன்!!

374

 
இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் Muzzafarnagar பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார விளக்கு மனிதன் என தான் பகுதி மக்கள் அழைக்கிறார்கள். காரணம், நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை.

இதோடு, பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் வயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்து கொள்கிறார்.
இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம்.

ஒரு முறை ஏதேச்சியாக மின்சார வயரை தொட்டுள்ளார், ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்பத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நரேஷ்குமார் கூறுகையில், தொலைக்காட்சி பெட்டி, வோஷிங் மிஷின், குளிர்சாதனப் பெட்டி என என எல்லா வகையான மின்சார பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன்.

என் மீது மின்சாரம் பாயாது, வீட்டில் உணவில்லாத போது மின்சார வயர்களை வாயில் வைத்து கொண்டால் பசி அடங்கி விடும் என தெரிவித்துள்ளார்.