நீதிபதி இளஞ்செழியனின் உயிர் காத்தவரின் மனைவிக்கு கிடைத்த மறுவாழ்வு!!

377


யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி நேற்றையதினம் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைந்துள்ளார்.



யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது, இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியை கௌரவிக்கும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அவரால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னரே அவரை மீண்டும் சேவையில் இணைத்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.



அதற்கமைய அவரது வீடு அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையமான பள்ளம பொலிஸ் நிலையத்தில் சேவை செய்வதற்கு அவருக்கு நேற்றைய தினம் முதல் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். நல்லூர் கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.