13 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணில் இலங்கை அணி படைத்த மோசமான சாதனை!!

268

இந்தியாவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக பறிகொடுத்தது.

இதன்மூலம் 13 ஆண்டுகளின் பின் இலங்கை அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றின் அனைத்து போட்டிகளிலும் தோற்றிருப்பது இது முதல் முறையாகும்.

மறுபுறம் இந்திய அணி பல்லேகல டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணி என்ற பாகிஸ்தானின் (8) சாதனையை முறியடித்துள்ளது.

இலங்கையில் இந்திய அணியின் 9 ஆவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு இதில் ஐந்து வெற்றிகள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்திய அணி 1967க்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றது இது முதல் முறையாகும். அடுத்து இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஆடும் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.