அமெரிக்க சிறுமியின் நெகிழ்ச்சியான செயல்! : சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!

379

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தால் 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்துள்ளார்.

ஏழை மாணவியான அனிதா மருத்துவ கல்வியை தொடர முடியாமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி அனிதாவுக்கு ஆதரவு அளித்து தமிழகத்தில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க சிறுமியின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த காணொளியில் சிறுமி கூறியுள்ளதாவது,

அனிதாவின் தந்தைப் பெயர் சண்முகம். என் தந்தைப் பெயரும் சண்முகம். அதனால், தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

மருத்துவப்படிப்புக்கு அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, இந்தியாவில் நீட் என்ற நுழைவுத் தேர்வு உள்ளது. ஆனால், அதற்கு நிறைய செலவு செய்து படிக்க வேண்டும்.

அனிதாவின் தந்தை மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளி. மிகவும் ஏழ்மையான குடும்பம். எனவே, அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடினார்கள். நீதிமன்றம் வரை சென்றனர்.

ஆனால், அவரின் இலட்சியம் நிறைவு பெறவில்லை. அனிதாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதை நிறுத்திவிட்டு, எதற்காக அவர் நீதிமன்றம் சென்றாரோ. அதற்காக நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.