ஆபத்தான கட்டத்தில் லண்டன் நகரம் : ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிப்பு!!

246

லண்டன் மாநகரம் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Parsons Green நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட வெடிப்பானது பயங்கரவாத அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 29 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டதுஇவ்வாறான நிலையில்

லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரோந்துப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக முக்கிய இடங்களிலும், மக்கள் நெரிசலான இடங்களிலும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய அதிகமான பொலிஸ் அதிகாரிகளை போக்குவரத்து பகுதிகளில், பொது மக்கள் அவதானிக்க முடியும் எனவும் தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுவொரு முன்னேற்றகரமான மற்றும் விவேகமான நடவடிக்கை ஆகும், இது விசாரணைகளை அதிகரிக்கும் போது கூடுதலான உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.