இரண்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மைதானத்தில் கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

559

 
தென் ஆபிரிக்காவில் இரண்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் செஞ்சூரியனில் உள்ள லாடியம் கிரிக்கெட் மைதானத்தில் கே.எப்.சி மினி கிரிக்கெடின் ஒருங்கினைப்பாளர் ககிசோ மசுபெலேலி (27) மற்றும் லாடியம் மைதானத்தின் தலைமை பயிற்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபெட் ஹார்வி அக்போமட்சி (27) ஆகியோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இருவரும் ஸ்டேடியத்தின் மைதானத்தில் உள்ள அறையில் தங்கியிருக்கும் போது கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல்கள் குளியலறையில் கிடத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைப்பற்றி தென்னாபிரிக்க கிரிக்கெட் தலைவர் ஹசன் லார்கட் கூறுகையில், இது மிகவும் கடினமான ஒன்று, இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவம் க்ளப் கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. நமது இளைய தலைமுறைக்கு இது நல்ல ஒரு ஆரோக்யாமான விடயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.