வவுனியாவில் மகிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல்!!

281

 
வவுனியாவில் இன்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி, ஈ.பி.டி.பி கட்சி, இணைந்த வடக்கு கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டதுடன் வரவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலில் கலந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.