வவுனியாவில் வியாபார நிலையமொன்றில் வாங்கிய பாணுக்குள் நூல்!

687

வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.