பாரிசில் இலங்கைப் பெண்ணின் கைப்பையை பறித்த திருடனின் நிலை கவலைக்கிடம்!

543

பரிஸில் இலங்கை பெண் பயணி ஒருவரின் பையை கொள்ளையடிக்க முயற்சித்த திருடன் உயிருக்கு போராடி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் பிரான்ஸ் வடக்கு பரிஸ் பகுதியில் இலங்கை தமிழ் பெண் ஒருவரின் பையை பறித்த நபரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கியதுடன், கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளனர்.

இலங்கை சுற்றுலா பயணி ஒருவரினால் ஓட்டி சென்ற காரை இருவர் தாக்கியுள்ளதுடன், மற்றொருவர் கார் சக்கரத்தின் காற்றை பிடுங்கியுள்ளார். இதன் போது காருக்கு என்ன நடந்ததென பார்ப்பதற்கு காரில் இருந்து வெளியே வந்த சுற்றுலா பயணியின் பையை திருடி சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த சுற்றுலா பயணி உதவி கோரி கூச்சலிட்டுள்ளார். இலங்கையர்கள் அதிகமாக வாழும் பரிஸின் லாச்சப்பல் பகுதியில் இருந்த மக்கள் பையை திருடிய திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

இரண்டு திருடர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மடக்கி பிடிக்கப்பட்ட திருடன் அங்கிருந்த தப்பி செல்ல முயற்சித்த போது மக்கள் கூட்டத்தினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளதுடன் இருமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் திருடனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த நிலையில் குறித்த திருடன் உயிருக்கு போராடி வருவதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.