அரச அலுவலக நேரங்களில் மாற்றம் : இன்று முதல் அமுல்!!

280

பத்­த­ர­முல்லைப் பிர­தேச அரச அலுவலர்­களின் அலு­வ­லக நேரங்­களில் நெகிழ்ச்­சி­யினைச் செயற்­ப­டுத்தும் முன்­னோ­டித்­திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­மென அரச நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சு அறி­வித்­துள்ளது.

இது­தொ­டர்பில் அமைச்சு வெளியி­ட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, அமைச்­ச­ரவைத் தீர்­மா­னத்தின் பிர­காரம், கொழும்பு நக­ரத்தில் நிலவும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லுக்குத் தீர்­வாக முற்­செ­யற்­பாட்டுத் திட்­ட­மி­டலின் ஆரம்பகட்­ட­மாக பத்­த­ர­முல்லைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அலு­வ­லர்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை­யான மூன்று மாத காலத்­திற்கு இந்த நெகிழ்­வான நேரத்தை திணைக்­களத் தலை­வரின் அனு­ம­தி­யுடன் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இதன் பிர­காரம், காலை 7.30 மணிக்கும் மாலை 5.00 மணிக்­கு­மி­டை­யி­லான காலத்­தினுள் மோட்டார் வாகன சார­திகள் 9 மணித்­தி­யால சேவைக் காலத்­தி­னையும், கனிஷ்ட அலு­வ­லர்கள் 8 மணி 45 நிமிட சேவைக் காலத்­தி­னையும், ஏனைய அலு­வ­லர்கள் 7 மணி 45 நிமிட சேவைக்­கா­லத்­தி­னையும் கொண்­ட­தாக நாளொன்­றுக்­கான வேலை நேரம் இருக்க வேண்டும் எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இச்­சேவை நேரத்தில் அலு­வ­ல­கத்­திற்கு வரும் நேர­மா­னது காலை 7.30 மணிக்கும் 9.15 மணிக்­கு­மி­டைப்­பட்­ட­தா­கவும், அலு­வ­ல­கத்தை விட்டு வெளியேறும் நேர­மா­னது பிற்­பகல் 3.15 மணிக்கும் மாலை 5 மணிக்­கு­மி­டைப்­பட்­ட­தா­கவும் இருத்தல் வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தோடு, பொது­மக்­க­ளுக்கு சேவை வழங்­கு­வ­தற்­காக சகல அரச அலு­வ­லர்­களும் குறிக்­கப்­பட்ட அலு­வ­லக நேரங்­க­ளுக்கு ஏற்ப காலை 9.15 மணி தொடக்கம் பிற்­பகல் 3.15 மணிக்­கி­டை­யி­லான காலத்­தினுள் கட்­டா­ய­மாக கட­மையில் ஈடு­பட வேண்­டு­மெ­னவும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இது­த­விர, நிறு­வ­னத்தின் நட­வ­டிக்­கை­களை தடை­யின்றி முறை­யாக நடத்திச் செல்­வ­தற்கு முடி­யு­மான வகையில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­வதன் கீழ் அலு­வ­லர்கள் மற்றும் நிறு­வனத் தலை­வர்கள் என்ற இரு தரப்­புக்­க­ளி­னதும் முன் அனு­ம­தி­யுடன் நெகிழ்ச்­சி­யான அலு­வ­லக நேரத்தில் தனது நிறு­வ­னத்­தினுள் செயற்­ப­டுத்த நிறு­வனத் தலை­வர்கள் பொறுப்­புடன் இருத்தல் வேண்­டு­மெ­னவும் அமைச்சு வெளியிட்­டுள்ள சுற்று நிரு­பத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும், நெகிழ்ச்­சி­யான அலு­வ­லக நேரத்­தினை செயற்­ப­டுத்தும் காலப் பகு­தி­யினுள் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் தமக்கு உரிய பொது­வான அலு­வ­லக நேரம் தவிர்ந்த நேர­மொன்­றினை தமது அலு­வ­லக நேர­மாகக் கரு­து­வ­தற்கு உடன்­பட்ட எந்­த­வொரு அலு­வ­ல­ருக்கும் அர­சாங்க நிர்­வாக சுற்­று­நி­ரு­பத்தின் மூலம்

ஏற்­பா­டுகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்ளன. கடமைக்கு சமுகமளிக் கும் போதும், கடமை முடிந்து வெளியேறும் போதும் ஏற்ப

டும் தாமதங்கள் மற்றும் அத்தாமதங்களை ஈடுசெய்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் பெற்றுக் கொடுத் தல் கூடாதென அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது