கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதன் போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும், சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பரிசோதகர் சுமணசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது சந்தேக நபர்கள் நால்வரின் பெயர்கள் பெறப்பட் டுள்ளன. இருந்த போதும் இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை.