கிளி­நொச்­சியில் வாள்வெட்டு : நால்வர் அவ­சர சிகிச்சைப் பிரிவில்!!

266


கிளி­நொச்சியில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற வாள் வெட்டுச் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நால்வர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

கிளி­நொச்சி பரந்தன் பகு­தியில் அமைந்­துள்ள விடுதி ஒன்றின் பின்­ப­கு­தியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதி­யி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த விடு­தியில் இரு இளை­ஞர்கள் மது அருந்திக் கொண்­டி­ருந்த போது அவர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் முற்­றிய நிலையில் அது இரு குழுக்­க­ளுக்­கி­டை­யே­யான மோத­லாக மாறி வாள்­வெட்டில் முடிந்­துள்­ளது.

இதன் போது படு­கா­ய­ம­டைந்த நால்­வரும் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அவ­சர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு அதில் ஒருவர் நோயாளர் விடு­திக்கு மாற்­றப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவ­சர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். இவர்கள் ஆப­த்தான நிலையில் இல்லை எனவும் வைத்­தி­ய­சாலை­ வட்டாரங்கள் தெரி­வித்­துள்­ளன.

குறித்த சம்­பவம் தொடர்பில் கிளி­நொச்சி பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்பு பதில் பொறுப்­ப­தி­கா­ரியும், சிறு­குற்றப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யு­மான உப பரிசோ­தகர் சும­ண­சிறி தலை­மை­யி­லான குழு­வினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த விசா­ர­ணையின் போது சந்தேக நபர்கள் நால்வரின் பெயர்கள் பெறப்பட் டுள்ளன. இருந்த போதும் இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை.