வவுனியா பாரதிபுரத்தில் பதற்றம் : இரானுவத்தினர் குவிப்பு : தேடுதல் வேட்டை தீவிரம்!!

252


 
வவுனியா பாரதிபுரத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து இன்று (18.09) நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று காலை 10 மணியளவில் வீட்டு காணியை தோண்டும் பணிகள் இடம்பெற்றபோது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.

இன்று காலை விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்பு அப்பகுதியை சுற்றி பலப்படுத்தப்பட்டிருந்தது. 10 மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிசார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான இடத்தை தோண்டும் பணியை மேற்கொண்டனர்.



தோண்டப்பட்ட கிடங்கில் தகர பரல் மட்டுமே காணப்பட்டது. அப் பகுதியில் வேறு சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கிடைக்காததனால் தோண்டப்பட்ட இடம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில் மலசல கூட பாவனைக்காக தகரத்தை பாவித்திருக்கலாம் என விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.