ஒன்பது வயது சிறுமியின் உயிரைக்காவு கொண்ட காய்ச்சல்!!

446

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி சந்திவெளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

எனினும் காய்ச்சல் தொடர்ந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளார். கிதுசா (வயது 9) என்ற சிறுமியே இவ்வாறு காய்ச்சால் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் தாய் தற்போது சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்ற நிலையில் பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்துள்ளார்.

மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.