லண்டன் பார்க்கில் கைவிடப்பட்ட குழந்தை : புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!!

324


லண்டனில் உள்ள பார்க்கில் பிறந்த குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் பொலிசார் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தாயாருக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Plaistow பகுதியில் அமைந்துள்ள பார்க் ஒன்றில் கடந்த 17ஆம் திகதி காலை 8 மணி அளவில் உள்ளூர் நேரப்படி பொலிசாருக்கு, இங்கு குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடந்து அப்பகுதிக்கு அம்புலன்சுடன் வந்த பொலிசார், குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரி என்று கூறப்படும் அக்குழந்தை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், குழந்தையின் தாயாருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.



அதில் குழந்தைக்கு பத்திரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறான். அதனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், உங்களுக்காக உங்கள் குழந்தை காத்துக் கொண்டிருக்கிறான், தயவு செய்து வாருங்கள் எனவும் குழந்தை தாய் தொடர்பான தகவல் பொதுமக்கள் யாரேனுக்கும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி பொலிசார் தெரிவித்துள்ளனர்.