பிரான்சில் அமெரிக்க மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

249

பிரான்சில் உள்ள ரயில் நிலையத்தில் அமெரிக்க கல்லூரி மாணவிகள் மீது பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் மார்ஸிலீஸில் உள்ள இரயில் நிலையத்தில் மர்ம பெண் ஒருவர், நான்கு கல்லூரி மாணவிகள் மீது அசிட் வீசியுள்ளார்.

இதில் நான்கு மாணவிகளும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அசிட் வீசிய மர்ம பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளதாகவும், அப்பெண்ணின் வயது 41 எனவும் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் பாதிப்புக்குள்ளான நான்கு பெண்களும் பரீசில் தங்கிப் படித்து வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.