பிஞ்சுக் குழந்தையை வீட்டில் தனியாக அடைத்துக் கொன்ற தாய்!!

314

ரஷ்யாவில் பெற்ற தாய் 9 மாத குழந்தையை ஒரு வாரம் வீட்டில் தனியாக அடைத்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Rostov பகுதியை சேர்ந்த 17 வயதான Viktoria Kuznetsova என்ற பெண்ணே இவ்வாறு தனது குழந்தையை கொன்றுள்ளார்.

கணவர் ரஷ்யா இராணுவத்தில் சேவை செய்து வரும் நிலையில், தனது குழந்தை Egor உடன் Viktoria Kuznetsova வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நண்பர்களுடன் ஒரு வாரம் பார்ட்டிக்கு சென்ற Viktoria Kuznetsova, குழந்தையை தனியாக வீட்டில் அடைத்து விட்டு சென்றுள்ளார். நண்பர்கள் குழந்தையை குறித்து கேட்ட போது உறவினரிடம் குழந்தையை விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு வாரமாக Viktoria Kuznetsova வீட்டில் இல்லாததை அறிந்த அண்டை வீட்டுகாரர்கள் பொலிசில் தகவல் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டில் உயிரிழந்த கிடந்த குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தையின் தாய் Viktoria Kuznetsova வை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் குழந்தையை கவனித்துக் கொள்ள தான் விரும்பவில்லை என Viktoria Kuznetsova தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொன்ற Viktoria Kuznetsovaவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.