பிச்சைகாரனை காதலித்து திருமணம் செய்த பாலியல் தொழிலாளி!!

426

பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் சித்ரவதைதான். ஆசைப்பட்டு ஒன்றும் அந்த தொழிலில் யாரும் இருந்துவிடுவதில்லை, என்றாவது ஒருநாள் நாம் இந்த தொழிலில் இருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையில் தான் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள்.

அப்படி, ஒரு நம்பிக்கையில் இருந்த பேகம் என்ற பாலியல் தொழிலாளி பிச்சைக்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த கதை இதோ,

என்னுடைய வயதோ, என்னுடைய பெற்றோர் யார் என்று எனக்கு தெரியாது. நான் தெருக்களில் எனது வாழ்க்கையை கழித்தேன். பல்வேறு நபர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயன்றபோது அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளேன். வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன், அந்த தொழிலில் இருந்து வெளியே வந்தால் யாரும் எனக்கு உதவி செய்யமாட்டார்கள் என எனக்கு தெரியும்.

இருந்தபோதிலும் ஒரு நாள் மாலைப்பொழுதில் அங்கிருந்து வெளியேறினேன். அப்போது நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது, மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கினேன். அப்போது அந்த மரத்தின் மற்றொரு பக்கத்தில் பிச்சைக்காரர் ஒருவர் தனது நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்துள்ளார்.

அவர் இருப்பதை நான் கவனிக்கவில்லை, மழை சற்று நின்றுவிடுவதுபோன்று இருந்தது, மழை நின்ற பின்னர் நாம் எங்கு செல்வது என்று நினைக்கையில் எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

அப்போது, அந்த பிச்சைகாரர் தனது நாற்காலியை சத்தமாக இயக்கினார், அந்த சத்தம் கேட்டு அவரை நான் திரும்பிபார்த்தேன், அவரும் அழுதுகொண்டிருந்த என்னை பார்த்தார். அவரிடம் என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினேன், உடனே அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை எடுத்து எனது கையில் கொடுத்து விட்டு, இடி பயங்கரமாக இருக்கிறது, பாதுகாப்பாக இரு என்று சொல்லிவிட்டு தனது நாற்காலியை அழுத்திக்கொண்டு தூரல் மழையில் மெதுவாக சென்றார்.

முதல் முறையாக ஒரு ஆண் மகன் என்னை பயன்படுத்திக்கொள்ளாமல் எனக்கு பணம் கொடுத்து சென்ற தருணம் அது. அக்கணமே அந்த பிச்சைகாரரின் மேல் எனக்குள் ஒருவித மதிப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர், சில நாட்களுக்கு பின்னர் அந்த பிச்சைகாரர் அதே மரத்தடியில் இருப்பதை பார்த்தேன், அப்போது அவரிடம் சென்றுபேசிய போது அவர் தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறினார். நான் ஊனமுற்றவன் என்பதால் எனது மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். வயிற்றுபிழைப்புக்காக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என கூறினார்.

அவரின் கதையை கேட்ட எனக்கு வேதனையாக இருந்தது, அவர் மீது இருந்த மரியாதை காதலாக மாறியது. நான் உங்களை காதலிக்கிறேன், உங்களுடைய சற்கர நாற்காலியை வாழ்நாள் முழுவதும் தள்ளுவதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தேன், அதை கேட்ட அவர் சிரித்தார்.

எங்கள் இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது, ஒருவேளை சாப்பிட்டிற்கே நாம் கஷ்டப்பட்ட காலம் உண்டு. அப்படி உணவு கிடைத்தால் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம்.பழைய நாட்களை மறந்து இனிமையாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.