வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்று (18.09) மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாம்பல்தோட்டம் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்த நபரிடம் கடமையிலிருந்த பொலிசார் சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் 34 வயதுடையவர் எனவும் எங்கிருந்து இவர் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.